தி.மு.க-வின் முன்களப் பணியாளரை ‘பஞ்சர்’ செய்த பா.ஜ.க தலைவர்..!

தி.மு.க-வின் முன்களப் பணியாளரை ‘பஞ்சர்’ செய்த பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

தமிழ்நாடு பா.ஜ.க போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்  என்று தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் கிண்டலாக அண்மையில் கூறியிருந்தார்.

அதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க MP தயாநிதி மாறனுக்கு டுவிட்டரில் இவ்வாறு பதிலடி கொடுத்து இருந்தார்.

  • கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T 20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள். மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி
  • தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா Thiru மு.க. ஸ்டாலின் அனுமதிப்பாரா? என்று தயாநிதி மாறனுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

அதனை தொடர்ந்து தி.மு.க-வை சேர்ந்த முன்களப் பணியாளர்கள் எப்படியேனும் தமிழக பா.ஜ.க தலைவரை மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர்களின் உண்மையான சுயரூபத்தை புரிந்துக் கொண்டு முன்களப் பணியாளர்களுக்கு தக்க பதிலடியை அண்ணாமலை இன்று வரை கொடுத்து வருகிறார் என்பதற்கு இக்காணொளி மற்றொரு சான்று என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it