தீவிரம் அடையும் உட்கட்சி குழப்பம்…! விளக்கம் அளித்த துரைமுருகன்…!

தீவிரம் அடையும் உட்கட்சி குழப்பம்…! விளக்கம் அளித்த துரைமுருகன்…!

Share it if you like it

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன். ஸ்டாலினிடம் அடம் பிடித்து தனது மகனுக்கு தேர்தலில் சீட்டு வாங்கி கொடுத்து அழகு பார்த்தவர். மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் என்று தமிழக அரசிற்கு எதிராக ஸ்டாலின் அண்மையில் நாடகம் நடத்தியது அனைவரும் அறிந்ததே..

ரூபாய் போட்டு திறந்த ஆலைகளை மூடி விட்டுப் போக, நாங்கள் மட்டும் இளிச்சவாயன்களா? நாங்கள் மூடிவிட்டால் ஊரில் இருக்கிறவன் சம்பாதித்துக்கொண்டே இருப்பான் என்று துரைமுருகன் தெரிவித்து இருந்த கருத்து.

ஸ்டாலின் மட்டுமில்லாது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் இடையே மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்பட்டு இருப்பது திமுகவினரிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it