நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர் – அவர் பெயரையே குழந்தைக்கு  சூட்டி பெருமைப்படுத்திய தாய் !

நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர் – அவர் பெயரையே குழந்தைக்கு சூட்டி பெருமைப்படுத்திய தாய் !

Share it if you like it

  • தமிழகத்தில் ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்றால் மத்திய அரசானது மக்களை பாதுகாக்கும் எண்ணத்தில் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத நிலையில் அவருக்கு ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர் மணிகண்டன் அந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவியுள்ளார்.
  • அதன்பின் மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் உதவி செய்து தாயையும், சேயையும் காப்பாற்றியதால், ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக் “மணிகண்டன்” என்கிற பெயரையே அந்த குழந்தைக்கும் பெயர் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளனர் அந்த பெண் குடும்பத்தினர். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இதில் மணிகண்டன் என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it