பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – உதவிய  நடிகை ரோஜா !

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் – உதவிய நடிகை ரோஜா !

Share it if you like it

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதுப்பேட்டை என்ற ஊரில் நிறைமாத கர்ப்பிணி பெண்மணி ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிக்சை பெற திருப்பதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு எடுத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் புதுப்பேட்டை 108 ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றுள்ளதால் செய்வதறியாது திகைத்த அவர்கள் நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவிற்கு தகவல் கொடுக்க அவர் உடனே அவரது காரை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது காரில் அந்த கர்ப்பிணி பெண் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்குள்ள மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Share it if you like it