பிரபல இந்திய ஊடகத்திற்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த ஜ.எஸ் தீவிரவாதிகள் இயக்கம்….!

பிரபல இந்திய ஊடகத்திற்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த ஜ.எஸ் தீவிரவாதிகள் இயக்கம்….!

Share it if you like it

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு தொடர்பு உள்ளது என்கின்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. கடத்தல் தங்கங்கள் நகை வியாபாரிகளுக்காக அல்ல, தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதற்காக அவை கடத்த பயன்படுத்தப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஜஏ) நீதிமன்றத்தில் அதிர்ச்சிகரமான அண்மையில் கூறியிருந்தது இந்நிலையில்

ஜனம் டிவியில் பணியாற்றும் ஊழியர்களையும், அந்நிறுவனத்தையும் முற்றிலும் அழித்து விடுவோம். வெகு விரைவில் இந்த உலகத்தை விட்டு விடை பெற தயாராக இருங்கள் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜ.எஸ் தீவிரவாதிகள் ஜனம் டிவி நிறுவனத்திற்கு பகீரங்க மிரட்டல் விடுத்திருப்பது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்க கடத்தல் தொடர்பான விசாரணைக்கு எதிராக தீவிரவாதிகளின் செயலாக இது இருக்குமோ என்று காவல்துறை சந்தேகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it