புலனாய்வு அதிகாரியை கொன்று சாக்கடையில் வீசிய டெல்லி CAA எதிர்ப்பு போராளிகள் !

புலனாய்வு அதிகாரியை கொன்று சாக்கடையில் வீசிய டெல்லி CAA எதிர்ப்பு போராளிகள் !

Share it if you like it

டெல்லியின் சந்த்பாக் பகுதியில் நேற்று இரவு புலனாய்வுப் பணியாளர் ஒருவரை, CAA எதிர்ப்பு போராட்ட கும்பல் ஒன்று கற்களால் அடித்து கொடூரமாக கொல்லப்பட்டு, பின் அவரது உடலை சாக்கடையில் வீசி சென்றுள்ளனர்.

அந்த அதிகாரி அங்கித் சர்மா எனவும் அவரது வயது 26 எனவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர் ஐ.பி.யில் பாதுகாப்பு உதவியாளராக பணிபுரிந்தவர். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த வன்முறையினால்,  இதுவரை 20 உயிர்களைக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் CAA க்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்கார்களில் சிலர் தெருக்களில் வாள் மற்றும் கைதுப்பாக்கியுடன் சுற்றி திரிந்ததாக பொதுமக்கள் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it