மக்களிடையே போலி செய்தியை  பரப்பியதற்காக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரை கைது செய்த காவல் துறை !

மக்களிடையே போலி செய்தியை பரப்பியதற்காக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரை கைது செய்த காவல் துறை !

Share it if you like it

  • கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோன்க் என்ற நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியது.
  • இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை கலத்தின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் காங்கிரஸ் வலைத்தளத்தின் பொறுப்பாளராகவும் உள்ள ராஜஸ்தானின் டோங்கில் வசிக்கும் மொஹ்சின் ரஷீத் என்பவர் அந்த கும்பல் காவலர்களை தாக்கியதை நியாயப்படுத்தி பேசி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றுநோயை பற்றி மக்களிடையே வகுப்புவாதத்தை தூண்டும் வகையில், மக்களிடையே வதந்தியை பரப்பியுள்ளார். இதனையடுத்து ஐபிசியின் பிரிவு 505 (2) (வகுப்புகள் இடையே பகை, வெறுப்பு அல்லது தவறான விருப்பத்தை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல்) கீழ் அவருக்கு எதிராக ராஜஸ்தான் போலீசார் அவரை கைது செய்து அவர்மீது பதிவு செய்தனர்.

Share it if you like it