மசூதிகள் முன் பெரியார் சிலையை வைத்தால் ஜவாஹிருல்லா ஏற்றுக்கொள்வாரா?…பிரபல எழுத்தளர் கேள்வி…!

மசூதிகள் முன் பெரியார் சிலையை வைத்தால் ஜவாஹிருல்லா ஏற்றுக்கொள்வாரா?…பிரபல எழுத்தளர் கேள்வி…!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக திமுக, திக, இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அண்ணா காலத்தில் ஆரம்பித்து இன்றைய ஸ்டாலின் வரை ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை மிகவும் இழிவுப்படுத்தும் விதமாக கறுப்பர் கூட்டம் போன்ற இயக்கங்களுக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்று தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் திரு. மாரிதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் ஈவேரா சிலை 1000க்கும் மேலான இந்து கோவில்கள் முன் வைத்தது திமுக அரசு. இப்போ அந்த ஈவேரா சிலைகளைப் பிடுங்கி மசூதிகள் முன் நட்டு வைத்து “கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்”என்று எழுதி வைத்தால் ஜவாஹிருல்லா ஏற்பாரா! ஆக இப்போதும் சொல்வேன் திமுக இந்துக்களின் எதிரி.


Share it if you like it