யோகி அரசு மீது அவதூறு பரப்பிய நபர் சென்னை வந்து தூக்கி சென்ற உ.பி போலீஸ்..!

யோகி அரசு மீது அவதூறு பரப்பிய நபர் சென்னை வந்து தூக்கி சென்ற உ.பி போலீஸ்..!

Share it if you like it

சென்னை மாதவரத்தில் இருந்து கொண்டு உத்தரபிரதேச அரசு குறித்தும், பாரதப் பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து யூடிப்பில் வீடியோ வெளியிட்டு வந்த மன்மோகன் குருஜி என்பவரை உ.பி போலீசார் சென்னைக்கு வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னை மாதவரம் கே.பி.ஆர் நகரில் சொந்த வீட்டில் வசித்து வருபவர், தன்னை தானே குருஜி என்று அழைத்துக் கொள்ளும் மன்மோகன் மிஷ்ரா. இவர் மண்ணடி தம்புச் செட்டி தெருவில் பாரத சுவாமி மகான் சுதேசி என்கிற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.

உத்திர பிரதேச மாநிலத்திலும் மடம் ஒன்றை நடத்தி வரும் மன்மோகன், அடிக்கடி உத்தரபிரதேசம் சென்று வருவது வழக்கம். மேலும் யூடிப்பில் மன்மோகன் என்ற பெயரில் உ.பி அரசு குறித்தும், பாரதப் பிரதமர் மோடி குறித்தும், மிக கடுமையான விமர்சனங்களை பேசியுள்ளார். பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் உ.பி போலிசார் சென்னை வந்து குருஜி மன்மோகனை கைது செய்து உ.பி-க்கு அழைத்து சென்று உள்ளனர்.

 

நன்றி ; பாலிமர் நியூஸ்


Share it if you like it