ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த இந்து முன்னணி…!

ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த இந்து முன்னணி…!

Share it if you like it

செக்கிழுத்த செம்மல், சுதேசி கப்பல் ஓட்டிய இந்தியன், வெள்ளையர்களை எதிர்த்த  சுதந்திர போராட்ட சிங்கம்.. வ.உ.சிதம்பரனார் 84வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

தியாகி வ.உ.சிதம்பரனார் தனது கடைசி காலத்தில் சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வாழ்ந்து வந்தார்.. அவருக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கும் விதமாக இந்து முன்னணி இவ்வாறு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது..

இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட இருக்கின்ற மெட்ரோ ரயில் திட்டத்தில், வ.உ.சி. அவர்கள் பெரம்பூர் பகுதியில் வாழ்ந்ததை நினைவுகூறும் விதமாக `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ ரயில் நிலையம்’ என பெயர் சூட்டிட வேண்டும் என்று  சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தை இந்து முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it