வாக்குவாதத்தில் விஜய் ரசிகரை  கொலை செய்த ரஜினி ரசிகர் !

வாக்குவாதத்தில் விஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர் !

Share it if you like it

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், இவர் விஜய் ரசிகர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு, இவர் ரஜினி ரசிகர். இருவரும் நண்பர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள். ஊரடங்கு உத்தரவால், இருவரும் வேலைக்குச் செல்ல முடியாததால் வீட்டிலேயே இருந்தனர். நேற்று மதியம் இருவரும், வீட்டின் அருகே மது குடித்துள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறியதும், ‘கொரோனா நிவாரண நிதியாக, அரசுக்கு அதிக பணம் கொடுத்தது, ரஜினியா, விஜயா என, அவர்களுக்குள் விவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி விஜய் ரசிகரான யுவராஜை ரஜினி ரசிகரான தினேஷ் பாபு கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த காவல் துறையினர் கொலை செய்த தினேஷ் பாபுவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share it if you like it