விநாயகர் சதுர்த்தி எதிரொலி – தெறிக்க விட்ட பிரபல அரசியல் விமர்சகர் பதட்டமடைந்த நெறியாளர் தம்பி தமிழரசன்…!

விநாயகர் சதுர்த்தி எதிரொலி – தெறிக்க விட்ட பிரபல அரசியல் விமர்சகர் பதட்டமடைந்த நெறியாளர் தம்பி தமிழரசன்…!

Share it if you like it

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஆன்மீக பக்தர்கள், ஆன்மீக பெரியோர்கள்,  தங்கள் உணர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தி.மு.க அரசு தொடர்ந்து தனது அடக்குமுறையை ஹிந்துக்கள் மீது காட்டி வருவதாக நெட்டிசன்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று அண்மையில் மதுரை ஆதீனம் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக நியூஸ் 18-ல் விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீனிவாசன் ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி உள்நோக்கத்துடன் தடை செய்யப்படுகிறது என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளியிட்டு பேசி இருந்தார்.

செந்தில், கார்த்திக்கை செல்வன், காத்திகேயன், வரிசையில் உள்ள நெறியாளர்களில் ஒருவரான தம்பி தமிழரசன் தனது பதட்டத்தை இடை, இடையே அரசியல் விமர்சகரிடம் காட்டி இருப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து  வருகின்றனர்.

Image


Share it if you like it