ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும் அவல நிலையை கண்டு கொதித்தெழுந்த- அயல்நாட்டு இமாம் தவ்ஹிடி

ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும் அவல நிலையை கண்டு கொதித்தெழுந்த- அயல்நாட்டு இமாம் தவ்ஹிடி

Share it if you like it

மகாராஷ்டிர மாநிலத்தில் ஹிந்து சாதுக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி படுகொலை செய்துள்ளது, ஒரு கும்பல். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று சாதுக்கள் உயிர் இழந்திருப்பது. நாடு முழுவதும், கடும் அதிர்ச்சியையும், அக்காணொலியை பார்த்தவர்களுக்கு மன அழுத்தத்தை, ஏற்படுத்தி இருக்கும் என்பதில் துளியும், மாற்று கருத்து இருக்க முடியாது.

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், மொழி, நமக்கு அரசியல் ஆதாயம் கிட்டுமா என்பதனை பார்த்த பிறகே, வாய் திறந்து கருத்து சொல்லும். அவலநிலை இந்தியாவை தவிர வேறு எங்கும் காண முடியாது, என்று மக்களின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இஸ்லாமிய மக்களிடையே, நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி, திகழ வேண்டும் என, உழைக்க கூடியவர் இமாம் தவ்ஹிடி. தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவில் காட்டுமிராண்டித்தனமான கும்பல்களால் இந்து சாதுக்கள் கொல்லப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காணொலி காட்சியை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்., இந்த குற்றவாளிகளைத் தடுக்க இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். என்று அவர் கூறியுள்ளார்.

திசை திருப்பும் ஊடகங்கள்.

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கூட, தனது அரசியல் ஆதாயத்திற்காக, வாய் மூடி மெளனியாக உள்ள நிலையில். இக்கொடுமையை கண்டு மனம் கலங்கி, தன் குரலை இந்துகளுக்காக உயர்த்தி உள்ளது. போலி அரசியல்வாதிகளுக்கு செருப்படியாக அமைந்துள்ளது என்று நெட்டிசன்கள், கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it