கோவிலுக்கு ஒரு நியாயம்…! மசூதிக்கு ஒரு நியாயமா..! ஹெச். ராஜா ஆவேசம்…!

கோவிலுக்கு ஒரு நியாயம்…! மசூதிக்கு ஒரு நியாயமா..! ஹெச். ராஜா ஆவேசம்…!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக திக, திமுக, இரு திராவிட கழகங்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருவதை தற்பொழுது ஹிந்துக்கள் மெல்ல மெல்ல உணர துவங்கியுள்ளனர்.

அண்மையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது கருத்தினை இவ்வாறு கூறியிருந்தார்.

மக்கள் வரிப்பணத்தில் ஈவேரா சிலை 1000க்கும் மேலான இந்து கோவில்கள் முன் வைத்தது திமுக அரசு. இப்போ அந்த ஈவேரா சிலைகளைப் பிடுங்கி மசூதிகள் முன் நட்டு வைத்து “கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்”என்று எழுதி வைத்தால் ஜவாஹிருல்லா ஏற்பாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு.ஹச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கோவில்கள் முன்பாக இந்து விரோதி ஈ.வெ.ரா சிலைகள் இருக்கலாம். மதரசாவிற்கு எதிரில் உள்ள சாலையில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதினால் கைதா. தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது. இது இந்துக்களுக்கு சவால்.


Share it if you like it