போதை மகனுக்கு அம்மாவின் ட்ரீட்மென்ட்!

போதை மகனுக்கு அம்மாவின் ட்ரீட்மென்ட்!

Share it if you like it

கஞ்சாவிற்கு அடிமையான தனது மகனை கம்பத்தில் கட்டி வைத்து முகத்தில் மிளகாய் பொடியை தடவிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள கோடாட் என்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. சக நண்பர்களுடன் இணைந்து 15-வயது உடைய சிறுவன் கஞ்சா அடித்துள்ளான். இதனையறிந்த, அவனது தாய் தனது மகனை ஊரே வேடிக்கை பார்க்கும் வண்ணம் லைட் கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கியுள்ளார். மேலும், ஆத்திரம் குறையாத தாய் மகன் மீண்டும் தவறான வழிக்கு, சென்று விடக் கூடாது என்பதற்காக அவன் முகத்தில் மிளகாய் பொடியை தடவ முயன்றுள்ளார்.

தனது முகத்தில் மிளகாய் பொடியை பூச வேண்டாம் என மகன் கெஞ்சியுள்ளான். அவனின், அழுகுரலை காதில் வாங்கிக் கொள்ளாமல், தனது மகனின் முகத்தில் மிளகாய் பொடியை தடவியுள்ளார். எரிச்சல் தாங்க முடியாமல், அவன் கதறி அழுத காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், அவனின் கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் ஊற்றுமாறு அவன் தாயிடம் கேட்டு கொண்டனர். இதனையடுத்து, கஞ்சா புகைக்க மாட்டேன் என மகன் உறுதியாக கூறிய பின்பே அவனின் தாய் மனம் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சென்னையை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், சிகரெட் பிடித்து கொண்டே நடுத்தெருவில் நடந்து வந்துள்ளான். அப்பொழுது, இதைகண்ட பெண்மணி ஒருவர் மாணவனின் எதிர்காலம், வீணாகி விட கூடாது என்பதற்காக அவனை பிடித்து மிக கடுமையாக திட்டியதுடன் அவனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it