ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஹனிமிரெட்டி பள்ளி கிராமத்தில் உள்ள பிரம்மேந்திர ஸ்வாமி ஆசிரமத்தில் லட்சுமி நாராயண ஸ்வாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதத்திலிருந்து சனாதன தர்மத்திற்கு மாறிய 18 குடும்பங்கள் கலந்து கொண்டனர். பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ், சமரசிதா சேவா அறக்கட்டளை செயலாளர் ரெட்டி ஆகியோர் இந்நிகழ்ச்சியை நடத்தினர். நமது இந்து தர்மத்தைப் பற்றி அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பல நல்ல போதனைகள் உள்ளன. இந்நிகழ்ச்சியில் 500 இந்து உறவினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குடும்பமும் ஹோமம் மற்றும் இதர பூஜைகள் செய்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.