மக்கள் சேவகன் மோடி -3.0 | 2024 லும் மீண்டும் மோடி வேண்டும் மோடி

மக்கள் சேவகன் மோடி -3.0 | 2024 லும் மீண்டும் மோடி வேண்டும் மோடி

Share it if you like it

காங்கிரஸ் ஆட்சியில் நேரு காலம் முதல் மன் மோகன் சிங் காலம் வரை இந்தியாவின் மத்திய அரசு சார்ந்த உயர் பதவிகள் – பட்டம் – விருதுகள் என்று அனைத்தும் நேரு குடும்பம் சார்ந்தவர்கள் அல்லது அவர்கள் நலன் விரும்பிகள் அவர்கள் விருப்பம் அறிந்து நிறைவேற்றும் அடிவருடிகள் மட்டுமே பெற முடிந்தது. சோனியாவின் அபிமானம் இருந்தால் போதும் குடியரசு தலைவர் பதவி கூட சாத்தியம் ஆகும்.ஆனால் அவரின் கோபத்திற்கு ஆளாகி விட்டால் முழுதாக ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் பதவியில் இருந்தவர் ஆயினும் இறந்தவருக்கு முன்னாள் பிரதமர் என்ற குறைந்த பட்ச மரியாதை – கட்சி மூலமான இறுதி மரியாதை – நினைவிடம் என்ற கௌரவம் என்று எதுவும் கிடைக்காது என்ற நிலைதான் இன்று வரை எழுதாத சட்டமாக இருக்கிறது. நேர்மையான மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி அரசியல் பாதையில் பயணிக்கும் ஆர்எஸ்எஸ் வழி வந்த பாஜகவின் மோடி சர்க்கார் தமிழகத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் நூறு வயது தாய் . விஷப் பாம்புகள் பிடித்து பத்திரமாக வனத்தில் சேர்க்கும் இருளர் சமூகம் சார்ந்த மாசி சடையன் இணையர்கள். ஒடிஷாவின் நாட்டு புற கலை வளர்க்கும் சமையல் காரர் என்று தகுதியும் திறமையும் இருக்கும் கடைக்கோடி இந்தியர்களை தேடி பிடித்து பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.

இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர் என்ற‌ வகையில் தமிழ் திரைப்பட நடிகர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் கலைத்துறையில் உயரிய விருதான செவாலியே விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். கடந்த காலங்களில் இங்கு அவருக்கு காங்கிரஸ் திமுகவால் எந்த உயர்ந்த அங்கீகாரமும் கிடைக்காமல் தடுக்கப்பட்டது. காரணம் அவர் ஆன்மீக வாதி. தேசிய வாதி. இன்று அவரது குடும்பம் பாஜகவில் ஐக்கியம்.

ஒரு சிறைத்துறை அதிகாரியாக சிறைத்துறை நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்த சாதனை பெண் என்ற வகையில் திஹார் சிறையில் தலைமை கண்காணிப்பாளராக இருந்த திருமணம் துறந்து தன் வாழ்நாள் முழுவதும் காவல் துறை பணிக்கு அர்ப்பணித்த கிரண்பேடி ஐபிஎஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் வீர தீர சேவை பணிக்கான உயரிய விருதான மகஸேஸே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிரண் பேடி 80 களில் புது தில்லியில் போக்குவரத்து கண்காணிப்பு பணியில் இருந்த போது அப்போதைய பிரதமர் இந்திராவின் காரை கைப்பற்றி அபராதம் விதித்தவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் கொடுத்த குடைச்சல் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவரை புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக உயர்த்தி கௌரவப் படுத்தியது பாஜக மோடி அரசு. .

வாஜ்பாய் காலத்தில் அணுகுண்டு சோதனையை வெற்றி கரமாக செய்து முடித்த இந்திய அணு விஞ்ஞானியை பாஜக காங்கிரஸ் திமுக கூட்டணி எதிர்ப்பு மீறி குடியரசு தலைவர் ஆக்கியது. பாஜக. மேற்குலக நாடுகள் கலாமின் பிறந்த நாளை அணு ஆய்வு தினம் மற்றும் அறிவியல் ஆய்வக தினம் என்று கொண்டாடி அவருக்கு கௌரவம் சேர்க்கிறது. சோனியா பிரதமர் ஆவதை தடுத்த கலாமை இரண்டாம் முறையாக குடியரசு தலைவராக விடாமல் தடுத்தது காங்கிரஸ் திமுக கூட்டணி அவருக்கு ஏற்படுத்திய அவமதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. இன்று வரை கலாமை உயர்த்தி பிடிப்பது ஆர்எஸ்எஸ்- பாஜக மட்டுமே.

இதோ நமது கண் முன்னே மோடி ஆட்சியில் இஸ்ரோவின் தலைவராகி. சந்திராயன் – மங்கள்யான் என்று விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயம் எழுத முயன்ற இஸ்ரோவின் தலைவர் திரு சிவன் அவர்களுக்கு அவரது வாழ்நாள் சேவைக்காக வோன் கர்மான் விருது என்ற கௌரவத்தை ஸ்வீடன் நாடு அறிவித்துள்ளது. இதே இஸ்ரோவின் நம்பி நாராயணன் அவரது ராக்கெட் ஆய்வின் காரணமாக காங்கிரஸ் ஆட்சியில் என்ன கதிக்கு ஆளானார்? . என்று யோசியுங்கள். மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல நேரங்களில் பாகிஸ்தானுக்கு பதிலடி தர தயாராக இருந்த இந்திய இராணுவத்தின் கைகள் கட்டப்பட்ட உண்மையை இன்று பலரும் ஆதாரங்கள் பேசுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் சாதனையாளர்கள் எல்லாம் என்ன பாடு பட்டிருப்பார்கள்? என்ற உண்மை புரியும்.

இன்று மோடி ஆட்சியில் சந்திராயன் முயற்சியில் விக்ரம் லாந்தர் தோல்வியுற்றதில் நிலைகுலைந்த இஸ்ரோ சிவனை மோடி பிள்ளையை போல தேற்றியதையும் சந்திராயன் முயற்சியை கேலி பேசிய காங்கிரஸ் கூட்டணி அரசியலையும் உலகம் கண் கூடாக பார்த்தது. இன்றளவும் இந்திய இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அவர்களின் முயற்சிகள் பாதுகாப்பு என்று அனைத்தையும் பாஜக ஆட்சியில் முதன்மை கடமையாக இருக்கிறது. இதோ இஸ்ரோவின் சிவனும் இதர விஞ்ஞானிகள் குழுவும் சந்திராயன் முயற்சியை தொய்வின்றி தொடர்ந்தார்கள். இன்று சந்திராயன் தனது வெற்றி பயணத்தை எட்டி விட்டது. உலகம் இந்திய இஸாரோவை ஆச்சரியம் அதிர்ச்சி பொங்க பார்க்கிறது.

குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அமெரிக்கா விசா தரக் கூடாது என்று கையெழுத்து இயக்கம் நடத்திய காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணி மற்ற சாமானிய மக்கள் விஷயத்தில் வெளிநாடுகளில் எவ்வளவு தூரம் ஐந்தாம் படை வேலை பார்த்திருக்கும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் உணர முடியும்.

ஆனால் இங்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டு திமுக கூட்டணி சமூக நீதி – சிறுபான்மை – தேச நலன் பற்றி மோடி அரசிற்கு பாடம் எடுக்கும். பாஜகவையும் மோடியையும் சமூகநீதி – சிறுபான்மை தேசத்துக்கு எதிரான சக்திகள் என்று தினமும் அரசியல் பேசும். இல்லாத சமூகநீதியை யுனெஸ்கோ விருது வாங்காத தற்குறி ஒருவன் தான் நிலை நிறுத்தியதாக ஈன அரசியல் பேசும்.

இன்னமும் காங்கிரஸ் அடுத்த ஆட்சியை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட செய்வோம் என்று வெட்கமில்லாமல் கேட்கிறது. மோடியை வீழ்த்தி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற கெடுமதியில் உலகம் முழுவதும் உள்ள மீடியா மாஃபியா – மெடிக்கல் மாஃபியா – ஆயில் மாஃபியா மற்றும் வெப்பன் மாஃபியா என்ற அரக்க கும்பலோடு கூட்டு சேர்ந்து தேசத்தை கூறு போட டூல்கிட் அரசியல் செய்து வருகிறது.

இந்திய மக்களே! என்ன செய்ய போகிறீர்கள் ? காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – திமுக என்று உங்களை உயிருடன் விழுங்க காத்திருக்கும் அரக்க கும்பல் ஒரு பக்கம். இந்த அரக்க கும்பலிடம் இருந்து உங்களை உங்களின் சந்ததிகளை பாதுகாக்க இந்த தேசத்தை உலகின் குருவாக வலம் வர செய்து வரும் பாஜகவின் மோடி அரசு ஒரு பக்கம். இந்தியர்களே ! உங்கள் நலன் பாதுகாப்பு பற்றிய இறுதி முடிவு உங்கள் கையில். யோசியுங்கள்.


Share it if you like it