சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் அருகே 800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அரசுடைமை வங்கி, கிறிஸ்துவ மத பிரச்சார கூடம் உட்பட 30 கட்டிடங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.