அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய பாஜக அரசு அதிரடி!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய பாஜக அரசு அதிரடி!

Share it if you like it

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள்.

அதேபோல, 2024-2025 -ம் ஆண்டிற்கான சணல் குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு ரூ.285 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,000 கோடி ரூபாய் செலவில் தேசிய அளவிலான இந்தியா ஏஐ நுட்ப மேம்பாட்டிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *