பொதுத்தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ; போதை மாநிலமாக தமிழ்நாடு இருந்தால் எப்படி படிப்பார்கள் ?

பொதுத்தேர்வில் 40 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ; போதை மாநிலமாக தமிழ்நாடு இருந்தால் எப்படி படிப்பார்கள் ?

Share it if you like it

சமீபத்தில் 10,11,12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்விற்கே வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

40 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கே செல்லாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். அப்படி என்றால் தமிழகத்தில் அரசு பள்ளிகளும் மாணவர்களும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எவ்வாறு முன்னேறி உள்ளது என்று பாருங்கள்.

ஒருபக்கம் தமிழகத்தில் போதை பொருள் அதிகமாகி வருகிறது. பள்ளி மாணவர்கள் கூட போதையில் நடுரோட்டில் விழுந்து கிடக்கின்ற நிகழ்வை திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும். சாதாரண பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக போதை பொருள் கிடைக்கிறது. இப்படி இருக்க அவர்கள் எப்படி நன்றாக படிப்பார்கள்.

மேலும் பல அரசு பள்ளிகள் காலாவதி ஆகின்ற நிலையில் தான் உள்ளது. சமீபத்தில் மழை பெய்ததால் பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. இன்னும் சில பள்ளிகளில் கூரையிலிருந்து மழை ஒழுகியதால் மாணவர்கள் தங்கள் தங்கள் சாப்பிடும் தட்டுகளை தலைமேல் வைத்து பாடம் படிக்கின்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கும்போது நம் நெஞ்சானது பதைபதைக்கிறது. இதை எல்லாம் பார்க்கும்போது நம் தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த திராவிட ஆட்சியில் என்றுதான் கேள்வி எழுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *