சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மீஞ்சூரில் இருந்து எண்ணூர் வரையிலான பொன்னேரி நெடுஞ்சாலையில் கனமழை பெய்ததால், மழைநீர் தேங்கி ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள தரமற்ற சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மேயர் பிரியா அவர்கள் மழைநீர் வடிகால் பணிகளுக்காக 4000 கோடி செலவிடப்பட்டு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது என்று பேசிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு #4000_கோடி_என்னாச்சு என்கிற ஹாஷ்டக்கையும் ட்ரெண்டிங்க் செய்து வருகின்றனர் சமூகவலைதளவாசிகள்.