மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நாட்டு மாடுகள்  கண்காட்சி !

மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நாட்டு மாடுகள் கண்காட்சி !

Share it if you like it

கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் அவர்களின் தலைமையில் நேற்று இரவு மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை நடந்தது.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடந்தது. மக்கள் மத்தியில் நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய நாட்டு மாடுகள் கண்காட்சியும் நடைபெற்றது.


Share it if you like it