CAA வுக்கு எதிரான பேரணியில் பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட பெண் கைது !

CAA வுக்கு எதிரான பேரணியில் பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட பெண் கைது !

Share it if you like it

கர்நாடகாவில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி பெங்களூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அஜாருதின் ஒவைசி கலந்து கொண்டிருந்தார். அதில் மாணவர்கள் அமைப்பு தலைவர் அமுல்யா லியோனா என்ற இளம்பெண்,  “பாகிஸ்தான் வாழ்க” என முழக்கமிட்டார்.  அந்த பெண்ணிடமிருந்து மைக்கை வாங்கிய பிறகும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மேடைக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தையிடம் கேட்டபோது, “என் மகளை சிறையில் அடையுங்கள், காவல்துறை அவள் கால்களை உடைக்கட்டும், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவள் என் குடும்பத்திற்கு மிகவும் துன்பத்தை ஏற்படுத்தியிருக்கிறாள்.என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it