ஆர்.எஸ்.பாரதியை  கைது செய்ய வேண்டும் – பகுஜன் சமாஜ் கட்சி !

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் – பகுஜன் சமாஜ் கட்சி !

Share it if you like it

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி என்பவர் மிகவும் அவதூறாகவும் வன்முறை தூண்டும் விதமாகவும் பேசியுள்ளார். அதில் ஆதிதிராவிடர்கள் நீதிபதியானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை எனவும் “அரிஜன்” எனும் இழிவுச்சொல்லை பயன்படுத்தி ஆதிதிராவிடர்களை சாதி ரீதியாக அவமானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

மேலும் பாஜக வை சேர்ந்த H.ராஜாவை பொறுக்கி பையன் என்றும் பத்திரிகையாளர்களை அயோக்கியர்கள் என்றும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it