மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவுக்கு 5 பேர் நியமனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுவுக்கு 5 பேர் நியமனம்!

Share it if you like it

உலகப் பிரசித்தி பெற்றதும் மதுரை மாநகரின் அடையாளமாகவும் விளங்கி வருவது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். 15 ஏக்கர் பரப்பளவில், 8 கோபுரங்களுடன் வைகை கரையில் மதுரையின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலில் மூலவர்கள் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள கோபுரங்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு ஏழு இசை உங்களுடன் 11 மண்டபங்கள் உள்ளது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்களாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரின் மனைவி உட்பட ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 18 ஆண்டுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக பதவி வகித்து வந்த கருமுத்து கண்ணன் கடந்த மே 23ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் செல்லதுரை என்பவரை கோயில் தக்காராக இந்த சமய அறநிலைத்துறை நியமித்து உத்தரவிட்டது.


Share it if you like it