தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடிக்கும் மாணவர்கள் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 66.55 லட்சம் பேர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 30,94,630 பேர் ஆண்கள். பெண்கள் 35,60,846 பேர். மூன்றாம் பாலினத்தவர் 290 பேர் என அரசு வேலையை எதிர்ப் பார்த்துள்ளனர்.