துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்கள் சுட்டு கொலை !

துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்கள் சுட்டு கொலை !

Share it if you like it

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாராயண்பூர் மற்றும் கண்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவம்
கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. வயநாட்டில் கடந்த 24ம் தேதி மாவோயிஸ்டுகள் ஊருக்குள் வந்து தேர்தலில் ஓட்டளிக்க வேண்டாம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *