ஒசாமா பின்லேடன் ஆதரவாளரான நீங்கள் ஏன்? மறைந்திருக்கிறீர்கள் ஜாகிர் நாயக்கை கேள்வி எழுப்பிய- இமாம் தவ்ஹிடி!

ஒசாமா பின்லேடன் ஆதரவாளரான நீங்கள் ஏன்? மறைந்திருக்கிறீர்கள் ஜாகிர் நாயக்கை கேள்வி எழுப்பிய- இமாம் தவ்ஹிடி!

Share it if you like it

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக். இனவாதம் மற்றும் நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது இந்தியா கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதேபோன்று ஜூலை 2016 இல் டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டின் விசாரணையில் உள்ளார். தற்பொழுது மலேசிய நாட்டின் ஆதரவில் அங்கு வசித்து வருகிறார்.

அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு இருந்தார் நாயக். அதில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளிடையே கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார். இந்தியாவில் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் முஸ்லிமல்லாதவர்களின் விவரங்களை சேகரிக்கும் படியும். விமர்சித்தவர்கள் தங்கள் நாடுகளில் இறங்கினால் உடனே அவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளிடையே அவர் கேட்டு கொண்டார்.

இந்நிலையில்  இஸ்லாமிய மக்களிடையே, நன்மதிப்பு பெற்றவரும், உலகம் முழுவதும் அமைதி, திகழ வேண்டும் என, உழைக்க கூடியவர் இமாம் தவ்ஹிடி. ஜாகிர் நாயக்கிற்கு இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி வழங்கியுள்ளார்.

கருத்தியல் பயங்கரவாதியும் ஒசாமா பின்லேடன் ஆதரவாளருமான ஜாகிர் நாயக் முஸ்லிம் அல்லாதவர்களை கைது செய்து அவர்களை அவதூறுச் சட்டங்களின் கீழ் முயற்சிக்குமாறு முஸ்லிம் நாடுகளை கேட்டுக்கொள்கிறார். அவர் சட்டத்தைப் பற்றி அவ்வளவு அக்கறை காட்டினால், அவர் ஏன் அதிலிருந்து மறைந்திருக்கிறார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/Imamofpeace/status/1260865966809980928


Share it if you like it