2023-ம் ஆண்டு இந்தியா – பாக். போர்: பிரபல ஜோதிடர் கணிப்பு!

2023-ம் ஆண்டு இந்தியா – பாக். போர்: பிரபல ஜோதிடர் கணிப்பு!

Share it if you like it

2023-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதிக்கும் டிசம்பர் 26-ம் தேதிக்கும் இடையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்கும் என்று பிரபல ஜோதிடர் ருத்ரா கரன் பர்தாப் கூறியிருக்கிறார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரைச் சேர்ந்தவர் ருத்ரா கரன் பர்தாப். பிரபல ஜோதிடரான இவர், பல்வேறு கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறிய அனைத்துமே நடந்திருக்கிறது, நடந்தும் வருகிறது. உதாரணமாக, பாகிஸ்தானில் நடந்துவந்த இம்ரான் கான் அரசு விரைவில் கவிழும் என்று 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி கூறியிருந்தார். அதன்படி, இம்ரான் கான் அரசு நிகழாண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. அதேபோல, 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் மாதத்திற்குள் 2 மிகப்பெரிய போர்கள் நடக்கும். ஒன்று, ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடக்கும். இன்னொன்று, சீனாவுக்கும் தைவானுக்கும் போர் நடக்கும் என்று ஜனவரி 30-ம் தேதியே கூறியிருந்தார்.

அதன்படி, தற்போது, ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருகிறது. சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் நிகழலாம் என்கிற பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இதே காலகட்டத்தில் வெள்ளம், சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார். அஸ்ஸாம், ஹிமாச்சல், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் பெரும் சேதத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானும் வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்தது. அதேபோல, மற்றொரு பதிவில், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, மோடி அரசு மீது பல்வேறு அவதூறுகளை கிளப்பி, களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், இறுதியில் மோடியே பாரத பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, 2022-ம் ஆண்டு நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தார். அதேபோலவே நடந்தது. மற்றொரு பதிவில், 2023-ல் மேங்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். இந்த சூழலில்தான், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடக்கும் என்று கூறியிருக்கிறார். அதாவது, 2023 அக்டோபர் 28-ம் தேதியிலிருந்து டிசம்பர் 26-ம் தேதிக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து மிகப்பெரிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபடும். அப்போது, இந்தியா தனது படைபலத்தை பயன்படுத்தி பாகிஸ்தானை ஒடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், பிரபல ஜோதிடர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், பாகிஸ்தானை இந்தியா நசுக்கும் என்று கூறியிருப்பது சற்றே ஆறுதலான விஷயமாகும்.


Share it if you like it