புனிதமான ஹிந்து தெய்வத்தை அவமதித்த ராகுல் காந்தி : கடும் கோபத்தில் மக்கள் !

புனிதமான ஹிந்து தெய்வத்தை அவமதித்த ராகுல் காந்தி : கடும் கோபத்தில் மக்கள் !

Share it if you like it

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மஹாராஷ்டிரா புனிதமான தெய்வமான பந்தர்பூரின் விட்டல் இறைவனை அவமதித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பிரித்தி காந்தி என்பவர் பதிவு ஒன்றை காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :- ராகுல் காந்தி மகாராஷ்டிராவிற்கு வந்து, நமது மிகவும் பிரியமான தெய்வமான பந்தர்பூரின் விட்டல் இறைவனை அவமதிக்கிறார்.

நமது மத நம்பிக்கைகள் மீது மரியாதை இல்லை & நமது கலாச்சாரம் பற்றிய அறிவு இல்லை, அவரது உடல் மொழி காட்டுகிறது அவர் தன்னை கடவுளுக்கும் மேலாக கருதுகிறார்!

இந்த தவறான நடத்தையை மகாராஷ்டிரர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் !

அந்த காணொளியில் மேடை ஒன்றில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்க அவருக்கு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தலைப்பாகை ஒன்றை அணிவிக்கிறார். அப்போது மற்றொரு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கையில் மஹாராஷ்டிரா புனிதமான தெய்வமான பந்தர்பூரின் விட்டல் தெய்வத்தின் சிலை ஒன்றை ராகுல்காந்திக்கு வழங்குவதற்காக ஆவலுடன் அருகே சென்றபோது அதனை வாங்காமல் மறுத்து விடுகிறார் ராகுல்காந்தி. இதனால் அந்த தொண்டரின் முகம் சோகத்தால் சுருங்கி போனது. இந்த சம்பவமானது மஹாராஷ்டிரா மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் இந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/MrsGandhi/status/1768200569657913676?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *