பா.ஜ.க. மூத்த தலைவர் காவல்துறையில் புகார்!

பா.ஜ.க. மூத்த தலைவர் காவல்துறையில் புகார்!

Share it if you like it

தமிழக ஆளுநரை பணி செய்ய விடாமல் அவையில் குழப்பத்தை ஏற்படுத்திய எம்.எல்.ஏக்கள் மீது பா.ஜ.க. மூத்த தலைவர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை தி.மு.க. அரசு திட்டமிட்டு பேரவையில் அவமதித்து விட்டதாக தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க.விற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில், வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் மீது மேதகு ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக, இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it