பேருந்தை ஓட்டி பிரபலமடைந்த பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்கு பதிவு !

பேருந்தை ஓட்டி பிரபலமடைந்த பேருந்து ஓட்டுனர் சர்மிளா மீது வழக்கு பதிவு !

Share it if you like it

கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது Instagram பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற சர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது திமுக எம்பி. கனிமொழி, பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it