ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியர் !

ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி பெண் ஊழியர் !

Share it if you like it

இறந்த மகளின் நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை வங்கி பெண் ஊழியர் தானமாக வழங்கினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர்உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தைசொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

பின்னர் மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக்கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமை ஆசிரியர் சம்பூர்ணம் ஆகியோர் முன்னிலையில், வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் நிலம் தானம் வழங்கியதற்கான ஆவணத்தை ஒப்படைத்தார். பெண் வங்கி ஊழியரின் இந்தச்செயலுக்கு அதிகாரிகள் அனைவரும் பாராட்டினர்.

இதுகுறித்து ஆயி என்ற பூரணம் கூறியதாவது: நான் பிறந்த ஊர் கொடிக்குளம். எனதுஅப்பா எனக்கு வழங்கிய ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளேன்.

பல்வேறு உதவிகள்… எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் விபத்தில் இறந்தார். நான் மகளை பி.காம். வரைபடிக்க வைத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொடுத்தேன். குடும்பப் பிரச்சினையால் மகள் இறந்துவிட்டார். எனது கணவர் இறந்தபோது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன். எனது மகள் இறந்த போது யாருக்காக வாழ்வது என நினைத்தேன்.

எனது மகள் சொன்னபடி ஒன்றரை ஏக்கர் நிலத்தை பள்ளிக்குத் தானமாக வழங்கியுள்ளேன். இதன் மூலம் எனது மகள்உயிருடன் வாழ்வதாக கருதுகிறேன். வெளியே தெரியாமல் பலருக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறேன். இவ்வாறு பூரணம் கூறினார்.


Share it if you like it