அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடை பெறும் என பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது. டெல்லி சென்றிருந்த அண்ணாமலை, உள்துறை அமைச்ர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க.மாவட்ட தலைவர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் நடைபெறும் என பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது. தற்பேதைய அரசியல் சூழலில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.