சூப்பர் சுருளி போல் பதில் அளித்த தி.மு.க. எம்.பி.!

சூப்பர் சுருளி போல் பதில் அளித்த தி.மு.க. எம்.பி.!

Share it if you like it

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்த தி.மு.க. எம்.பி.யின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆ. ராசா. இவர், நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்?; கள்ளச்சாரயம் அருந்தி இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு வெறும் ரூ. 5 லட்சம் மட்டும் தானா?: இதற்கு, என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் தி.மு.க. எம்.பி. ஆ. ராசா மழுப்பலான பதிலை வழங்கியுள்ளார். இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it