ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் வெகுவிரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்திற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தை சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் மேற்கொண்டனர். இந்நிலையில், ஆத்மி கட்சியின் இமாச்சல பிரதேச தலைவர் அனூப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் இக்பால் சிங் உள்ளிட்ட பலர் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் இன்று தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர். ஆம் ஆத்மி தலைவர்கள் பா.ஜ.க.விற்கு தாவிய சம்பவம் அக்கட்சியின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.