ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு மீண்டும் கடுமையாக உயர்த்தியுள்ளது. இது வரை இல்லாத அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரை கிலோ நெய் ரூ. 50 அதிகரிக்கப்பட்டு ரூ. 365-க்கு விற்கப்படுகிறது. அரை கிலோ வெண்ணெய் ரூ.15- உயர்ந்து 275 ரூபாய்கு விற்கப்படுகிறது. விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவின் பொருட்களின் விலை ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக் கப்பட்டுள்ளதால் மக்கள் கூடுதல் சுமையை சந்தித்துள்ளனர்.