பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ராதா ரவி பகீர் சவால்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், என பலர் பாரதப் பிரதர் மோடி அவர்கள் தமிழகம் வரும் பொழுது எல்லாம் அவருக்கு எதிராக கருப்பு பலூன் விட்டு தங்களது கடும் எதிர்ப்பினையும். மோடி மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வண்ணம் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை பரப்பி வந்தனர் என்பது பலரின் குற்றச்சாட்டு.
இந்த சூழ்நிலையில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வரும் 12-ஆம் தேதி பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தமிழக மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவினை கொண்டாட உள்ளார். கருப்பு பலூன் விட்டவர்கள் வரும் 12-ம் தேதி பிரதமருக்கு எதிராக பலூன் விட முடியுமா? என்று ஆவேசமாக பிரபல நடிகர் ராதா ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.