சூப்பர் ஸ்டார் திடீர் வேண்டுகோள்!

சூப்பர் ஸ்டார் திடீர் வேண்டுகோள்!

Share it if you like it

‘ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல நடிகர் மாதவன் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்து இருக்கிறார். அந்தவகையில், எடுத்திருக்கும் திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி. இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த, ஜூலை 1-ம் தேதி இப்படம் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

blank

பிரபல விஞ்ஞானியும் தமிழருமான நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அதற்கு, எதிராக அவர் நடத்திய நீண்ட சட்ட போராட்டம் என அனைத்தும் இப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், நடிகர் மாதவன் பலரின் முகத்திரையையும் இப்படத்தின் வாயிலாக தோலுரித்து காட்டி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என தனது ட்விட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it