நடிகர் சூர்யாவின் சுயரூபம் அம்பலம்..!

நடிகர் சூர்யாவின் சுயரூபம் அம்பலம்..!

Share it if you like it

நடிகர் சூர்யா பார்வதி அம்மாளுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தது, உள்நோக்கம் கொண்டது என பலர் கருத்து.

பிரபல திரைப்பட நடிகர் சூர்யா அண்மையில் நடித்து திரைக்கு வந்த படம் ’ஜெய் பீம்’, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் பல காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் விதமாகவும், சமூகத்தால் உண்மையிலேயே அநீதி இழைக்கப்பட்ட இருளர் பெண்மணி பார்வதி அம்மாளின், அனுமதி இல்லாமல் அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுத்து கோடி, கோடியாக, சம்பாரித்த சூர்யா., பார்வதி அம்மாளுக்கு உதவி செய்யாதது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

நடிகர் சூர்யா உட்பட யாரும் தனக்கு உதவி செய்யவில்லை என்று வேதனையுடன் பார்வதி அம்மாள் பேசிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில். அவசர, அவசரமாக 10 லட்ச ரூபாய் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Image

Share it if you like it