மும்பையில் சொகுசு மாளிகை: இந்த பணத்தில் எத்தனை ஸ்கூல் கட்டி இருக்கலாம்!

மும்பையில் சொகுசு மாளிகை: இந்த பணத்தில் எத்தனை ஸ்கூல் கட்டி இருக்கலாம்!

Share it if you like it

மும்பையில் நடிகர் சூர்யா குடும்பம் ரூ.68 கோடியில் வீடு வாங்கி இருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார் ;

”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், செல்ல முடியவில்லை. மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம்.

அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மிகவும் மனவேதனை அடைந்தேன். கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவற்றிற்கும் கொடுங்கள் என்று பேசி இருந்தார். ஜோதிகாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஹிந்து தலைவர்கள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

  • திருப்பதி ஆலயம் குறித்து நடிகர் சிவகுமார் தெரிவித்த சர்ச்சை கருத்து,
  • தஞ்சை பெரிய கோவில் குறித்து மருமகள் ஜோதிகா தெரிவித்த சர்ச்சை கருத்து.

என தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது சூர்யா குடும்பம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தான், நடிகர் சூர்யா மும்பையில் ரூ. 68 கோடியில் வீடு வாங்கியிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. உண்மையான அக்கறை இருப்பின் அந்த தொகையை மருத்துவமனைக்கோ அல்லது பள்ளி கூடத்திற்கோ வழங்கி இருக்கலாம் அல்லவா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

பதைபதைக்க


Share it if you like it