சூர்யா குடும்பத்திற்கு ஒரு சட்டம்… பள்ளி மாணவர்களுக்கு ஒரு சட்டமா?

சூர்யா குடும்பத்திற்கு ஒரு சட்டம்… பள்ளி மாணவர்களுக்கு ஒரு சட்டமா?

Share it if you like it

கீழடியை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் சூர்யா குடும்பத்திற்காக காக்க வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா தனது குடும்பத்தோடு சென்று பார்வையிட்டார். அக்குடும்பத்திற்கு, யாரும் தொல்லை கொடுத்து விட கூடாது என்பதற்காக அருங்காட்சியகத்திற்குள் செல்ல பொதுமக்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஒன்றை மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. ஊருக்கு உபதேசம் செய்யும் நடிகர் சூர்யா மாணவர்களிடம் மன்னிப்பு கேட்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it