‘எதற்கும் துணிந்தவன்’: சூர்யாவுக்கு பாடம்!

‘எதற்கும் துணிந்தவன்’: சூர்யாவுக்கு பாடம்!

Share it if you like it

நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம்.

நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று (10-ம் தேதி) வெளியாகி இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. புகழ்பெற்ற இயக்குனர் பாண்டிராஜ்தான் இப்படத்தின் இயக்குனர். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. கதாநாயகியாக பிரியங்கா மோகன், வில்லனாக வினய் ஆகியோர் கதாபாத்திரங்களை ஏற்றிருக்க, சத்யராஜ், சூரி, சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இளவரசு, தேவதர்ஷினி என பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. ஏற்கெனவே, சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததால், இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், சூர்யாவுக்கு கெட்ட நேரமோ என்னமோ என்னமோ தெரியவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திடீரென வன்னியர் சமுதாயத்தினரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. காரணம், ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டதாக அச்சமுதாய மக்கள் கருதியதுதான். ஆகவே, நடிகர் சூர்யா நடிக்கும் எந்தப் படத்தையும் வெளியிட விடமாட்டோம் என்று கலகக்குரல் எழுப்பினர். மேலும், எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என்று பா.ம.க. தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் சூர்யா, ஏற்கெனவே நீட், விவசாய சட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வந்தார். இதனால், தமிழகம் முழுவதுமே பா.ம.க.வுக்கு ஆதரவாகவும், சூர்யாவுக்கு எதிராகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வ ந்தனர். தவிர, ஏற்கெனவே தனது சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்களை சூர்யா, ஓ.டி.டி.யில் வெளியிட்டிருந்தார். அப்போது, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, தற்போது கடுமையான எதிர்ப்புக் கிடையில், எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்களும் தயக்கம் காட்டினர். இதனால், என்ன செய்வதெனத் தெரியாமல் சூர்யா தரப்பு கையைப் பிசைந்து வந்தது.

எனினும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் திட்டமிட்டபடி படம் நேற்று வெளியானது. ஆனால், பா.ம.க.வினர் பிரச்னை செய்ததால் விழுப்புரத்தில் முதல்நாளே காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதேபோல, தமிழகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் சிறு சிறு சலசலப்புகள் காணப்பட்டன. தவிர, பா.ம.க.வினர் பிரச்னை செய்வார்கள் என்ற பயத்தில், திரைப்பட ரசிகர்களும் சூர்யா படத்தை பார்க்க வருவதை தவிர்த்து விட்டனர். ஆகவே, தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் சூர்யா பற்றி மீம்ஸ் வெளியிட்டும், வசைபாடியும் வருகின்றனர்.


Share it if you like it