வன்னியர்கள் மீது வன்மத்தை கக்கிய தி.மு.க ஆதரவாளர்!

வன்னியர்கள் மீது வன்மத்தை கக்கிய தி.மு.க ஆதரவாளர்!

Share it if you like it

பிரபல இணையதள ஊடகத்திற்கு தி.மு.க ஆதரவாளர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் வன்னிய சமூக மக்களின் உணர்வுகளை வழக்கம் போல புண்படுத்தியுள்ளார். இவரின், இந்த பேச்சிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியானது ‘ஜெய் பீம்’ என்கிற திரைப்படம். ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் இரு ஜாதிகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இது, மேற்கண்ட இரு ஜாதிகளுக்கும் மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டார் நடிகர் சூர்யா. இப்படத்தைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை பலிகடாவாக்குவது போல கதை அமைந்திருந்தது.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் வட மாநிலங்களில் மெஜாரிட்டியாக இருக்கும். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மறைமுகமாக தாக்குவதுபோல இந்த கதைக்களம் அமைந்து இருந்ததே இதற்கு காரணம். இதனால், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை மட்டுமல்ல, அப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யாவின் ஒட்டுமொத்த படங்களையும், புறக்கணிக்கப்போவதாக வன்னியர் சமூக மக்கள் அச்சமயத்தில் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

நடிகர் சூர்யா வன்னிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து. தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, அச்சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து இருந்தனர். தி.மு.க அரசின் துணை தனக்கு இருப்பதால். ஆணவ போக்குடன் நடிகர் சூர்யா இன்று வரை மன்னிப்பு கேட்க மறுத்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அந்த வகையில், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் சவுக்கு சங்கர். வன்னிய சமூக மக்களிடம் நடிகர் சூர்யா ஏன்? மன்னிப்பு கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று ஆவேசமாக பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it