”வாரிசு அரசியலால் முதல்வரானவர் அல்ல மு.க.ஸ்டாலின் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதற்கு, நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தி.மு.க.வில் கட்சியின் அடிமட்டத்தில் தொடங்கி தலைமை வரை வாரிசு அரசியல் ஊறிப் (நாரி) போய் உள்ளது என்பதை நாடே நன்கு அறியும். உண்மை இவ்வாறு இருக்க, மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் நடிகர் விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார் :
எனக்கு முதலமைச்சர் மேல் ஏற்கனவே மரியாதை உண்டு. கண்காட்சியை பார்த்த பின்னர், அவர் வாரிசு அரசியல் மூலம் தான் இந்த இடத்திற்கு வந்தார் என்று கூற்று பொய் என தோன்றுகிறது என தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் அவரை பசுமையாக வாழ்த்தி வருகின்றனர்.