ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்க்கு அபராதம்!

ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்க்கு அபராதம்!

Share it if you like it

ரசிகர்களை சந்திப்பதற்காக நீலாங்கரையிலிருந்து பனையூருக்குச் சென்ற நடிகர் விஜய் கார், சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக போக்குவரத்து போலீஸார் 500 ரூபாய் அபாரதம் விதித்தனர்.

நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப்போவதாக செய்திகள் வெளியாகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், அடிக்கடி தனது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மேலும், சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதற்காக, நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு தனது காரில் சென்றார். அப்போது, பனையூர் செல்லும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜய்யின் கார் நிற்காமல் சென்றது. இது வீடியோ கேமராவில் பதிவானது.

இதையடுத்து, சிக்னலை மதிக்காமல் கார் சென்றதற்காக போக்குவரத்து போலீஸார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த அபராதத் தொகையை நடிகர் விஜய் செலுத்தி விட்டார். பிரபலங்கள் பலரும் இவ்வாறு சிக்னலை மதிக்காமல் செய்வது தொடர்கதையாக இருக்கிறது.


Share it if you like it