பொய் செய்தி பரப்பும் நிருபர்கள்: மூக்குடைத்த எடப்பாடியார், ஜெயக்குமார்!

பொய் செய்தி பரப்பும் நிருபர்கள்: மூக்குடைத்த எடப்பாடியார், ஜெயக்குமார்!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்லாத ஒன்றை சொன்னதாக திரித்துக் கூறி கேள்வி கேட்ட நிருபர்களுக்கு தரமான பதிலடி கொடுத்து மூக்குடைப்பு செய்திருக்கிறார்கள் எடப்பாடியாரும், ஜெயக்குமாரும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. இந்த சூழலில், கோவையில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிருபர்கள், எங்களோடு இணைந்து செயல்படாததால்தான், அ.தி.மு.க. தோல்வியை தழுவியது என்று அண்ணாமலை கூறியதாகச் சொல்லி கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடியாரோ, அண்ணாமலை பேசிய வீடியோவை நானும் பார்த்தேன். அவர் அப்படியெல்லாம் பேசவில்லை. அப்படி இருக்கும்போது அதற்கு நான் எப்படி பதில் சொல்வேன் என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், நிருபர்கள் மீண்டும் அதே கேள்வியை எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ஜெயக்குமாரும், அண்ணாமலை அப்படிப் பேசவே இல்லையே. இதே கேள்வியைத்தான் எடப்பாடியாரிடமும் கேட்டீர்கள். அவரும் அண்ணாமலை அப்படி பேசவில்லை என்றுதான் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க நான் எப்படி பதில் சொல்ல முடியும். மேலும், நீங்கள் என்னதான் சிண்டு முடிந்தாலும், அதற்கெல்லாம் உடனே டெம்ப்ட் ஆகி ரியாக்ட் செய்யும் ஆள் கிடையாது என்று சொல்லி நிருபர்களுக்கு மூக்குடைப்பு செய்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், நிருபர்களுக்கு பா.ஜ.க. மீது இருக்கும் வன்மத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it