இந்த தவறை செய்தால்; 15% ஹிந்துக்களின் ஓட்டுகளை அ.தி.மு.க இழக்கும் – பிரபல அரசியல் விமர்சகர் கருத்து!

இந்த தவறை செய்தால்; 15% ஹிந்துக்களின் ஓட்டுகளை அ.தி.மு.க இழக்கும் – பிரபல அரசியல் விமர்சகர் கருத்து!

Share it if you like it

கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களின், ஓட்டுகளை கருத்தில் கொண்டு, வருகின்ற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவை கூட்டணியில் சேர்த்து கொள்ளவில்லை என்றால் அ.தி.மு.க 15 சதவீத ஹிந்துக்களின் ஓட்டுகளை இழக்கும் என்று ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து உள்ளது. இதனை இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களும் வரவேற்று உள்ளனர். தங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

பா.ஜ.க, அ.தி.மு.க, கூட்டணி முறிந்து விட்டது, இனி அவ்வளவு தான் என்று எதிர்கட்சியை சேர்ந்தவர்கள், தி.மு.க ஆசி பெற்ற ஊடகங்கள் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதற்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எங்கள் கூட்டணி தொடரும், இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்று பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் தான், ஆர்.டி 360 என்னும் இணையதள ஊடகத்திற்கு பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களின், ஓட்டுகளை கருத்தில் கொண்டு, வருகின்ற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை கூட்டணியில் சேர்த்து கொள்ளவில்லை என்றால் அ.தி.மு.க 15 சதவீத ஹிந்துக்களின் ஓட்டுகளை அக்கட்சி இழக்கும் என்று ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.


Share it if you like it