பா.ஜ.க.வில் ஐக்கியமான அ.தி.மு.க. மகளிர் அணியினர்!

பா.ஜ.க.வில் ஐக்கியமான அ.தி.மு.க. மகளிர் அணியினர்!

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அதி.மு.க.வில் இணைந்த நிலையில், தற்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 500 பேர் பா.ஜ.க.வில் இணைந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே தமிழக பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் முட்டல் மோதலாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இந்த சூழலில், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவர் கங்காதேவி தலைமையிலான மகளிர் அணியினர் சிலர், தாம்பரம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிலையில், இதற்கு போட்டியாக தாம்பரம் அருகே நெற்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமானோர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வேதசுப்பிரமணியம் தலைமையில் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள்.


Share it if you like it