நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோயிலை கட்டும் திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது !

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோயிலை கட்டும் திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது !

Share it if you like it

ஹரியாணாவின் கர்னால் நகரில், மாநில அரசின் 5 திட்டங்கள் தொடங்கும் விழா நடைபெற்றது. முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “இன்று 5 மக்கள் நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள ஒன்று, முதல்வரின் தீர்த்த யாத்திரை திட்டம். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று மக்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தார்கள். தொடர்ந்து அரசை வலியுறுத்தினார்கள். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்தார்கள்.

ஆனால், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோயிலை கட்டும் திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. நாட்டு மக்கள் நரேந்திர மோடியை இரண்டாவது முறையாகவும் பிரதமராக்கினார்கள். அவர், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கினார். தற்போது கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. பூமி பூஜையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிலை பிரதிஷ்டையிலும் பங்கேற்க இருக்கிறார். ஹரியாணா மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்ற ராமரை தரிசிக்க வேண்டும். இவ்வாறு மத்திய உள்துறை உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.


Share it if you like it